Jan 26, 2011

காலமெல்லாம் காதல்

கல்லூரிக் காலங்களில்
உன் புகைப்படத்தை
புத்தகம் நடுவே
ஒளித்து வைத்து
அம்மாவுக்குத் தெரியாமல்
ரசித்திருக்கிறேன்


சம்பாதிக்க ஆரம்பித்தவுடன்
உன்னை விரைவில்
மணந்து கொள்ள
எனது வயதை
அடிக்கடி என் அம்மாவுக்கு
நினைவூட்டியிருக்கிறேன்


இன்னும் சில வருடங்களில்
என் அம்மாவிடமே
அவளைப் பிடித்திருக்கிறது
திருமணம் செய்து வையுங்கள்
என்று கூறியிருக்கிறேன்.


என்ன?
காலத்துக்கேற்ப என் காதலியே
நீ மட்டும்
மாறிக்கொண்டே இருந்திருக்கிறாய்...

திருமண ஆசையே
அற்றுப் போயிருக்கும் இவ்வேளையில்
எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக
இப்போது அம்மா தொலைப்பேசுகிறாள்...
சிரிப்பு தான் வருதடி எனக்கு!!!

5 comments:

Philosophy Prabhakaran said...

அப்படின்னா அய்யாவுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போல... வாழ்த்துக்கள்...

FARHAN said...

அருமையான கவிவரிகள்

செல்வா said...

டகால்டி டுபாகூர் சில்பான்ஸ் தட் இஸ் லேட்டஸ்ட் ..
ஒண்ணும் இல்லைங்க , உங்க ப்ளாக் வந்ததும் இது தோனுச்சு அதான் .

செல்வா said...

//என்ன?
காலத்துக்கேற்ப என் காதலியே
நீ மட்டும்
மாறிக்கொண்டே இருந்திருக்கிறாய்...//

உங்க கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க ,, ஆனா இது சோக கவிதையா ?

டக்கால்டி said...

Thanks for your valuable comments friends...
Sorry for the late response.I am a bit busy with my work.