Dec 13, 2010

நான் நானாகிறேன்

அளவளாவிய சாதனைகள்
செய்வதில்
விருப்பமில்லை எனக்கு...

ஏனெனில்..
குறுகிய காலத்திலேயே
சாதனை முறியடிக்கப்படும்
சாத்தியம் இருப்பதால்...

நான் நானாகிறேன்...
நானாகவே இருக்கிறேன்...


என் மனம் ஆசைப்படும்
அனைத்தையும்
முடிந்தவரை இன்றே
செய்துவிடுகிறேன் ...
இறந்த பின்
நிராசையானவைகளை அடைய
ஆவியாய் அலைவதைவிட
இது எவ்வளவோ மேல் என்று...

நான் நானாகிறேன்...
நானாகவே இருக்கிறேன்...

No comments: